Sunday, December 10, 2017

பெருங்குரங்கு



ஜெ

மாமலரை இப்போதுதான் முடித்தேன். நான் வழக்கமாக வெண்முரசை இணையத்தில் வாசித்துவிடுவேன். அதன்பின்னர் நூலாக வாங்கி மீண்டும் ஒருமுறை வாசிப்பேன். இணையவாசிப்பு வேறு நூல்வாசிப்பு வேறு. நூல்வாசிப்பு நாம் மூழ்கியிருக்கும் அனுபவம். அதோடு இணையவாசிப்பில் எதிர்பார்த்துக்கொண்டே இருப்பதனால் ஒரு இழப்பு உண்டு. நூல்வாசிப்பில் அது இல்லை. உதாரணமாக நூலாக வாசிக்கையில் முண்டன் அனுமன் என நன்றாகவேதெரிகிறது. வெண்முரசின் மகத்தான கதாபாத்திரம் அது. காலத்தை மலைபோல தூக்கிப்போட்டு விளையாடும் பெருங்குரங்கு அது


ஜெயராமன்