Saturday, January 13, 2018

குளிர்காற்று



ஜெ

போர் அணுகிவரும்பொழுது. எல்லாமே ஒரு உச்சநிலையில் கசப்பும் வன்மங்களுமாகச் சென்றுகொண்டிருக்கிறது. நடுவே தாரை ஒரு அழகான சிறிய பறவை போல இருக்கிறாள். அவளை மீன் என்கிறார் அவள் அப்பா. அவளுக்கும் கிருஷ்ணனுக்குமான அப்பா மகள் உறவும் கிருஷ்ணன் அவள் காதைப்பிடித்து இழுப்பதும் மிக அற்புதமாக இருந்தது. ஒரு நல்ல குளிர்காற்று வீசியதுபோல இந்த சூழலையே மாற்றிவிட்டது


ஜெயராமன்