Thursday, February 1, 2018

கணிகர் சொல்



அன்புள்ள ஜெ ,


கணிகர் சொல்லை  உணவுடன்  பொருத்தி பேசிய இடம் அருமையாக  இருந்தது , முதல் பார்வைக்கு  இந்த ஒப்புமை  ஆச்சிர்யபடுத்தியது , ஆனால் யோசிக்க கணிகர் சொல்லை ஆள்பவர்  என தோன்றியது , அவரால் சொல்லை நஞ்சாக  உணவாக  தன் விருப்பம் போல் மாற்றி அமைக்க முடியும் , இன்னும் சொல்லப்போனால்   நஞ்சையே  உணவாக அளிக்க முடியும் , அதை செய்பவர் என தோன்றியது .
இவர் எதிர் இடத்தில் கிருஷ்ணர் , சொல்லால்  ஒருவரின் மேல்மனதை  (  வெளி நடிப்பை  )  உடைத்து உண்மை உணர்வை வெளிக்கொண்டு வர இயலும் , பானுமதியில் அதை செய்தார் .

ராதாகிருஷ்ணன்