Monday, February 26, 2018

புல்லின் வஞ்சம்



ஜெ

இன்றுதான் நீலம் வாசித்து முடித்தேன். இந்நாவலை வாங்கி ஓராண்டாகிறது. வாசிக்க ஆரம்பித்து ஆறுமாதம். பலதடவைகளிலாக வாசித்துக்கொண்டே இருக்கிறேன். திரும்பத்திரும்பச் சில இடங்களை வாசிக்கிறேன். இந்த நாவலின் பெரிய சவால் இதன் மொழி. மயக்கி கொண்டுசெல்கிறது.செய்யுள்போல இசைபோல ஒலிக்கிறது. ஆனால் அதை நீக்கி சென்றால்தான் அடுத்தகட்டக் குறியீடுகளைச் சென்றடையமுடியும். உதாரணமாக திருணவிரதனின் கதை. அதைப்புரிந்துகொள்ள முடியவில்லை. ஏதோ ஒரு பொருந்தாக் கதை என நினைத்தேன். ஆனால் ஒருமுறை திருணம் என்றால்புல். யாதவரின் வாழ்க்கையே புல்தான். அந்த புல் ஏன் கிருஷ்ணனுக்கு எதிரியாக வந்தது? ஏன் கிருஷ்ணன் அதை அடக்கினான்? என்று சிந்தித்தபோது எல்லாமே புரிவதுபோலிருந்தது. நீலத்தை வாசிக்க ஓராண்டாவது ஆகும். நானெல்லாம் வெண்முரசை முடிக்க இன்னும் பத்து ஆண்டுகளாகும்


லக்ஷ்மிநாராயணன்