Tuesday, February 27, 2018

பிரேமை


ஜெ

மெல்லமெல்ல சுப்ரியையில் உருவாகி வரும் பிரேமபாவம் மனநிறைவை அளிக்கிறது. அவள் அந்தச்சிறிய அறைக்குள் முடங்கிக்கிடக்கும் வரை வெறுப்பும் அகந்தையும் கொண்டிருக்கிறாள். அங்கிருந்து அவள் மெல்லமெல்ல பறந்து எழுகிறாள். அதுதான் படகில் அவள் அடைந்த அந்தத் தியானநிலை என நினைக்கிறேன். அவள் மெதுவாக வளர்ந்து வளர்ந்துசெல்வதைக்காண நிறைவாக இருக்கிறது. அவள் எப்படியாவது கர்ணனைச் சென்று அடைந்துவிடவேண்டுமே என ஆர்வமாக இருக்கிறது. ஒவ்வொன்றையும் அவள் எப்படிப்புரிந்துகொள்கிறாள் என்பதை வைத்து அவளுடைய மோகம் கூடிக்கூடி வருவதைக்காணமுடிகிறது. அவள் மீட்பு கொள்ளவேண்டும் என ஆசைப்படுகிறேன்


எம்