Friday, February 23, 2018

ஆகுதி



அன்பு ஜெ,

    
அவிரதனின் தந்தை பல மன உளைச்சலுக்குப் பிறகு , தன் மகனை அதர்வவேள்விக்கு ,அர்ப்பணிக்க முடிவெடுத்து , உக்ரருடன் உடனனுப்ப சம்மதித்து ,அவனுடன் உசாவி , வேத அர்ப்பணிப்பின் அர்த்தத்தை உணர்ந்தாயா ! என்று விளம்ப , ஆம் ,தெரியுமென்றே கூறி புறப்படுகிறான்.

         
அதன் பிறகு தன் சக மாணவனான பௌர்வனனிடம்  உரையாடிய போதும் , அவனுடைய அஞ்சாமை இவனுக்கு முதலில் ஆச்சர்யத்தையும் , பிறகு அவன் மனம்கிளர்ந்து யெழுந்திருப்பதே  அதன் காரணம் என்பதை ,அவன் யூகித்தறிவதை திறன் பட ,வேறுபாட்டுடன்  உரையிட்டுள்ளீர்கள்.தானும் பயப்படாமைக்கு ,மனக்கிளர்வே காரணமாக அமையயிருப்பதை , அவன் உணர்வதையும் சுட்டி யுள்ளீர்கள்.

         
எல்லோருக்கும் மரணபயம் என்பது அசைந்து க்கொடுக்கும் உணர்வே ஆகும். எனினும்  , ஆகுதித் தேர்ந்தெடுப்பின் போது ,அதைப் பற்றி முன் கூட்டியே தெரியாததுப் போன்ற ,அவிரதனின் மனப்பான்மையானது,சற்றே முரனுறுவதுப்போல் தோன்றுகிறது.

          
எல்லாவற்றுக்கும் மேலாக அங்கீரசரின் குலக்காப்பு என்ற அந்த நுண்சொல்லும் நினைவுறுத்துக்கிறது.வேள்வி யின், அவி ,தேவர்களால் ஏற்றுக்கொளப்படாவிடின் ,நேரப்போகும் எதிர்வினைகளாக ,வரப்போகும் ,குருதிச்சாரலின் வீச்சு ,வெண்முரசையே அதிரவைக்கபோவது உறுதி.

அன்புடன்,
செல்வி அழகானந்தன்
கடலூர்.