Tuesday, March 6, 2018

யோகியின் சடை



ஜெ

வெண்முரசில் வந்துகொண்டே இருக்கும் உவமைகளை நினைவில்கொள்ளுதல் பெரிய வேலை. இது கிளாஸிக்குகளைப்போல அவ்வப்போது எடுத்து ஏதேனும் ஒரு பக்கத்தைப்புரட்டினாலும் ஒரு அரிய தெறிப்பு கண்ணில்படுவதுபோல அமைக்கப்பட்டது என்பது தெரிகிறது. இன்று அப்படி சென்ற இதழ்களைப்புரட்டியபோது கண்ணில்பட்ட வரி இது.  “கங்கை நிலத்திறங்கும்போது. மண்ணில் எதையும் விழையாத யோகியின் வறண்ட விரிசடையே அதை ஏந்தியது. அது உண்டதுபோக எஞ்சியதே உலகுக்கு அளிக்கப்பட்ட கங்கை”  மிகவும் தெரிந்த கதை. ஆனால் அரிய ஒரு கவித்துவ உவமையாக அது மாறிவிட்டிருக்கிறது. யோகி என்றால் யார் என்பதற்கான சரியான சான்று இந்தக்கதையே என நினைக்கிறேன்


சாரங்கன்