Thursday, March 1, 2018

வேள்வி




அன்புள்ள ஜெ, 

வேள்விச்சாலையின் ஒருக்கங்களும் அதன் விரிவான சபை அமைப்பும் முன்னாடியே வந்துவிட்டன. இப்போதுதான் அதில் நிகழும் விவாதங்கள் வருகின்றன. பொதுவாக இந்த விவாதங்கள் அதில் கலந்துகொள்ளாத ஒருவரின் பார்வையில் வருவதனால் அவை வாசகர்களின் கோணமாக ஆகிவிடுகின்றன. அதோடு அவர்களின் உணர்ச்சிகளையும் பார்வையாளர்கள் நுட்பமாக பார்த்து அறிவதற்குரிய வாய்ப்பு அமைகிறது. அந்த வேள்விச்சபையில் அமர்ந்திருந்து அனைத்தையும் கூர்ந்து பார்ப்பதுபோன்ற உணர்ச்சியை அடைந்தேன். இத்தகைய வேள்விகள் வேள்வி என்பதன் அர்த்ததையே மாற்றிவிடுகின்றன

செல்வராஜ்