Monday, May 21, 2018

அழகும் நன்மையும்




ஜெ

இந்த உலகத்தை விரும்புபவதன் பாதையில் வேதமும் தவமும் என்ன பொருள்படும் என்று ஒரு வரி இமைக்கணத்திலே வருகிறது. மிகமுக்கியமான வரி அது என தோன்றுகிறது


காமம் என்று இப்பகுதியிலே சொல்லப்படுவது உடல்சார்ந்த களிப்பு அல்ல. அது இந்த உலகத்தின்மேல் மானசீகமாகக்கொள்ளும் ஈடுபாடுதான். அழகையும் நன்மையையும் களித்து அனுபவித்து தெய்வானுபவத்தை அடைவதுதான் அது.

மகேஷ்