Sunday, July 30, 2017

அரவுக்காடு






அன்புள்ள ஜெ

முனிவர்கள் தமயந்தியை கொண்டு வருவது அழகான உருவகக் கதை. இதெல்லாம் எப்படி மீண்டும் மீண்டும் சித்தரிக்கிறீர்கள் என்று மலைப்பாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் வேறொரு அழகு, வேறொரு கோணம்.

எதிர்காலத்தில் உங்களை பின்பற்றி  யாராவது ஸ்னோவைட் குள்ளர்கள் கதையையும் கூட இப்படி எழுதலாம் !

மதுசூதன் சம்பத்
அன்புள்ள மது,
மூலக்கதைக்குள் இப்படி விரித்துச்செல்ல அனைத்து இடங்களும் உள்ளது. நாகம் நம் தொன்மப்பெருக்கின் அடியோட்டம். அனைத்தையும் நாகச்சரடால் இணைத்துள்ளனர்

ஜெ